கோவில்பட்டியில் ஜன.20இல் மாவட்ட செஸ் போட்டி

தூத்துக்குடி மாவட்ட அளவிலான செஸ் போட்டி கோவில்பட்டியில் வருகிற 20ஆம் தேதி நடைபெறுகிறது. 


தூத்துக்குடி மாவட்ட அளவிலான செஸ் போட்டி கோவில்பட்டியில் வருகிற 20ஆம் தேதி நடைபெறுகிறது. 
இதுகுறித்து கோவில்பட்டி வட்ட சதுரங்கக் கழகச் செயலர் மணிமொழிநங்கை வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்ட அளவிலான செஸ் போட்டி, கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள சிதம்பர நாடார் காமாட்சியம்மாள் திருமண மண்டபத்தில் இம்மாதம் 20ஆம் தேதி நடைபெறுகிறது. 7, 11, 15 மற்றும் 25 வயதுக்குள்பட்டோர் என 4 பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் பங்குபெற விரும்புவோர் இம்மாதம் 19ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். போட்டியில் பங்குபெறுவோர் செஸ் பலகை, உபகரணங்கள் மற்றும் பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.
போட்டியில் பங்குபெற விரும்புவோர் 98658-30030, 94860-24960, 90036-14942 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com