தூத்துக்குடி கோயிலில் திருவிளக்கு பூஜை

தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயிலில், பொங்கல்


தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயிலில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, உலக அமைதி, மழைவளம், தொழில்வளம் உள்ளிட்டவை வேண்டி, 351 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி பஜனை பாடலுடன், பத்திரகாளி, மாரியம்மாள், உச்சிமகாளி அம்மனுக்கு அலங்காரத்துடன் சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பூசாரி ஆறுமுகசாமி செய்திருந்தார். திருவிளக்கு பூஜையில் மகளிர் அணியினர், கோயில் நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com