ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை லட்சார்ச்சனை தொடங்கியது.
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த இக்கோயிலில் லட்சார்ச்சனை மற்றும் வருஷாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் சங்கல்பம், லட்சார்ச்சனை, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. வியாழக்கிழமையும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை காலையில் வருஷாபிஷேகமும், மாலையில் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகின்றன.