தூத்துக்குடி மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஜன. 24ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜனவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஜன. 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில், இம்மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.