தச்சமொழி முத்துமாரியம்மன் கோயிலில் சப்பர பவனி

தச்சமொழி தேவிஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் திருநாளையொட்டி அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தச்சமொழி தேவிஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் திருநாளையொட்டி அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இக்கோயிலில், பொங்கல் விழா மற்றும் பக்த பஜனைக்குழு 29ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 
மாலை 3 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு பஜனை,  இரவு 7 மணிக்கு அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. 
தொடர்ந்து அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார். தொடர்ந்து போட்டியில் வென்றவர்களுக்கும், மார்கழி மாத பஜனையில் பங்கேற்ற பஜனைக் குழுவினருக்கும் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வே. கார்த்திகேசபாண்டியன்,  க.கணபதி, வழக்குரைஞர் ஆ.க. வேணுகோபால் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். இரவு 9 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com