தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அம்மா திட்ட முகாம் தூத்துக்குடி வட்டம் தெற்கு சிலுக்கன்பட்டி, செந்திலாம் பண்ணை, ஸ்ரீவைகுண்டம் வட்டம் தெய்வச்செயல்புரம், செட்டிமல்லன்பட்டி, திருச்செந்தூர் வட்டம் அம்மன்புரம், சாத்தான்குளம் வட்டம் புதுக்குளம், கோவில்பட்டி வட்டம் வடக்குப்பட்டி, விளாத்திகுளம் வட்டம் எம். சுப்பிரமணியபுரம், மாதராஜபுரம், எட்டயபுரம் வட்டம் மஞ்சநாயக்கன்பட்டி, ஓட்டப்பிடாரம் வட்டம் கொடியன்குளம், கயத்தாறு வட்டம் ஒணமாகுளம், ஏரல் வட்டம் இருவப்பபுரம் பகுதி 1 ஆகிய கிராமங்களில் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.