தூத்துக்குடி புறநகர் பகுதியில் நாளை மின்தடை

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.29) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி நகர்ப்புற மின்


தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.29) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி நகர்ப்புற மின் வாரிய செயற்பொறியாளர் சி. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மீளவிட்டான், சின்னகண்ணுபுரம் பகுதிகள், பண்டாரம்பட்டி, புதூர்பாண்டியாபுரம், அகில இந்திய வானொலி நிலையம், தொழிற்பேட்டை வளாகம், கணேசன்நகர், ராஜீவ்நகர், மில்லர்புரம் பகுதி, மடத்தூர், தபால் தந்தி ஊழியர் குடியிருப்புகள்,  ராஜகோபால்நகர்,  3 ஆவது மைல், பத்திநாதபுரம், சங்கர்காலனி மற்றும் இந்திய உணவுக் கழக குடோன் பகுதி, நிகிலேசன் நகர், மின்வாரிய காலனி, டைமன்ட் காலனி, மதுரை புறவழிச் சாலை, ஏழுமலையான் நகர், அமுதாநகர், ஆசிரியர் காலனி, சில்வர்புரம், பசும்பொன்நகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், கிருபை நகர், பால்பாண்டி நகர், அசோக்நகர், செல்சிலினி காலனி, கால்டுவெல் காலனி, வள்ளிநாயகபுரம், சிவந்தாகுளம் நடுத்தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com