கோவில்பட்டி கண்தான இயக்கம் சார்பில் நன்றி நவிலல் கூட்டம் மற்றும் கண்தான விழிப்புணர்வு முகாம் ஆகிய இருபெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய மருத்துவ சங்க கோவில்பட்டி கிளை தலைவர் மருத்துவர் சீனிவாசன் தலைமை வகித்துப் பேசினார். திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கண்தான கொடையாளர்களின் குடும்பத்துக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி கெளரவித்தார். தொடர்ந்து, கண்தானம் பற்றிய விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில், தொழிலதிபர் அங்கமுத்து, எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி செயலர் கண்ணன், நாடார் நடுநிலைப் பள்ளிச் செயலர் கண்ணன், ரோட்டரி சங்கத் தலைவர் ஆசியா ஃபார்ம்ஸ் பாபு, செயலர் ரவிமாணிக்கம், ஸ்ரீகரா சி.பி.எஸ்.இ. பள்ளி நிர்வாக இயக்குநர் கண்ணன், கண்தான இயக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், பி.கே.நாகராஜன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கண்தான இயக்கத் தலைவர் விநாயகா ரமேஷ், செயலர் டென்சிங், பொருளாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.