கோவில்பட்டியில் நூல் வெளியீட்டு விழா

கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்றம் சார்பில் "குறளும் உழவும்' எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்றம் சார்பில் "குறளும் உழவும்' எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இவ்விழாவுக்கு, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமை வகித்து,  திருவள்ளுவர் மன்றச் செயலர் நம். சீனிவாசன் எழுதிய "குறளும் உழவும்' என்ற நூலை வெளியிட்டார். முதல் பிரதியை தமிழறிஞர் நெல்லை மு. படிக்கராமு பெற்றுக் கொண்டார். 
நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். நூல் குறித்து, திருநெல்வேலி தனித்தமிழ் கழகத் தலைவர் பா. வளன் அரசு பேசினார். திருவள்ளுவர் மன்றத் தலைவர் க.கருத்தப்பாண்டியன், புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப்பெருமாள், ரோட்டரி சங்க ஆளுநர் விநாயகா ரமேஷ், மகிழ்வோர் மன்றச் செயலர் ஜான்கணேஷ், உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்டச் செயலர் க.தமிழரசன், பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் மா.பரமசிவம், உலக திருக்குறள் கூட்டமைப்பின் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலர் செயாசனார்த்தனன், கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி பேராசிரியை அனுஷியாதேவி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியை கெங்கம்மாள் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். நிகழ்ச்சியினை மன்றத் துணைத் தலைவர் திருமலை முத்துசாமி தொகுத்து வழங்கினார். 
நூலாசிரியர் ஏற்புரை ஆற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com