தூத்துக்குடி தெர்மல் கடற்கரையில் தூய்மைப் பணி

தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, தூத்துக்குடியில் ஜூன் 27 முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சனிக்கிழமை நடைபெற்ற தெர்மல் நகர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை, காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ் தொடங்கிவைத்தார். கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளர் நவீன், உதவி ஆய்வாளர்கள் ஜானகிராமன், வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், கடலோரக் காவல் படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்துகொண்டு கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் சாதனைகள், கடலோரப் பாதுகாப்பில் விழிப்புணர்வு தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com