ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் கள்ளபிரான் கோயில் அருகில் உள்ள ஹிந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பக்தர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர் வந்து செல்லும் இப்பள்ளி சாலையில் உள்ள மின் கம்பத்தின் அடி பாகத்தில் சேதமடைந்து முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.