திருச்செந்தூரில் பாஜக புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எம். பாலாஜி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இரா.சிவமுருகன் ஆதித்தன் வரவேற்றார். ஒன்றியத் தலைவர் ஸ்ரீ கிருஷ்ணகுமார், நகரத் தலைவர் எஸ்.சரவணன், மாவட்ட தமிழ் வளர்ச்சிப் பிரிவுத் தலைவர் இரா.கிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணித் தலைவர் எ.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பாஜக சிறுபான்மை பிரிவு நகரத் தலைவர்களாக பி.ஜெரால்டு, ஆர்.தீபக், துணைத் தலைவராக ஜெயாஸ்டன், நகரச் செயலராக உபால்டன், நகர மீனவரணித் தலைவராக பி.நெப்போலியன், துணைத் தலைவராக பெங்கர், செயலராக எ.ஜாக்சன், இளைஞரணித் தலைவராக அகஸ்டின், செயலராக கெளதம், பொருளாளராக பி.ஜெகஜோதி, நகர மகளிரணித் தலைவியாக ஜெ.மேனகா, துணைத் தலைவியாக வளர்மதி, பொதுக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட மகளிரணி பொதுச்செயலர் கு.நெல்லையம்மாள் நன்றி கூறினார்.