நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிகள் காத்திருப்பு அறை மற்றும் மருத்துவர் ஆலோசனை அறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். மூக்குப்பீறி சேகரகுரு ஜெரேமியா ஆரம்ப ஜெபம் செய்தார். தென்திருப்பேரை வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன் வரவேற்றார். மருத்துவ அலுவலர் முத்துக்கண்ணம்மாள், தூய மாற்கு மேல்நிலைப் பள்ளித் தாளாளர் செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தலைமை ஆசிரியர் குணசீலராஜ், தொழிலதிபர் அருள்ராஜ், மருந்தாளுநர் ஆண்ட்ரூஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.