எப்போதும்வென்றான் அருகே இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
எப்போதும்வென்றானை அடுத்துள்ள மேலப் பொம்மையாபுரத்தைச் சேர்ந்தவர் சு.சுப்புராஜ் (30). வெல்டிங் தொழிலாளியான இவர், அருகே உள்ள சிவஞானபுரத்தில் தனியாக வெல்டிங் பட்டறை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாராம். இந்நிலையில் அதற்கு தேவையான பண உதவிகள் கிடைக்காததையடுத்து, அவர் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
எட்டயபுரம் அருகே...
எட்டயபுரம் அருகே ஆதனூரில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆதனூரைச் சேர்ந்த சக்திவேல் மகன் சுப்புராஜ் (30). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 3 ஆண்டுகளாக விரும்பி வந்தாராம். இந்நிலையில் அப்பெண்னுக்கு வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஆதனூர் கண்மாய் கரையோரம் சுப்புராஜ் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம். உறவினர்கள் அவரை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக எப்போதும்வென்றான் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.