குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி சங்கச் செயலர் முத்துமுருகன் தலைமை வகித்தார். தன்னார்வ கல்வி மைய கண்காணிப்பு அலுவலர் அழகர் பாலாஜி, ஊராட்சி செயலர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
முகாமில் குறும்படம் மூலமாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. வீடுகள் தோறும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பணித்தள பொறுப்பாளர் ரமணி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com