தம்பதியை மிரட்டி பணம், நகை பறிக்க முயற்சி: கணவருக்கு கத்திக்குத்து

நாசரேத்தில் தம்பதியிடம் நகை, பணம் கேட்டு மிரட்டியதோடு, கணவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


நாசரேத்தில் தம்பதியிடம் நகை, பணம் கேட்டு மிரட்டியதோடு, கணவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாசரேத் திருமறையூரைச் சேர்ந்தவர் ஜான் செல்லப்பா (67). ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து நடத்துநர். இவரது மனைவி பெல்சியா (60). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களது வீடு அப்பகுதியில் ஒதுக்குப்புறத்தில் உள்ளதாம்.
வெள்ளிக்கிழமை இரவு தம்பதி வீட்டில் இருந்தபோது, முகக் கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், அவர்களிடம் பணம் மற்றும் நகையை தருமாறு மிரட்டினராம். அதற்கு ஜான் செல்லப்பா மறுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனராம். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து நாசரேத் போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com