முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கயத்தாறு நூலகத்துக்கு மாணவ உறுப்பினர் சேர்க்கை
By DIN | Published On : 30th July 2019 07:40 AM | Last Updated : 30th July 2019 07:40 AM | அ+அ அ- |

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூலக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். தலைமையாசிரியை ஷெர்லி, கிளை நூலகர் சிவபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு ரோட்டரி சங்க துணை ஆளுநர் வி.எஸ். பாபு, நூலக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
தொடர்ந்து மாணவர், மாணவிகள் வாசிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். இதில், வாசகர் வட்ட நிர்வாகிகள் நீதிப் பாண்டியன், பூலையா, கணேசன், ஆசிரியர்கள் சுப்புராஜ், ரவீந்தர்குமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வீராச்சாமி, பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.