விவேகானந்தா கேந்திரம் சார்பில் நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் கலாசார பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் சாந்தி தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் கனகாம்பாள் முன்னிலை வகித்தார். விளாத்திகுளம் , நாகலாபுரம், புதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 120-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
தேசிய ஒருமைப்பாடு, தனி மனித ஒழுக்கம், கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் பேச்சு, கட்டுரை, கவிதை, விநாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், விவேகானந்த கேந்திரத்தைச் சேர்ந்த பயிற்றுநர்கள் செண்பகம், மணிமேகலை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ரமேஷ், சந்திரவேல், மோகன், சுரேஷ்குமார், அசோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.