தூத்துக்குடியில் கட்டுமானப் பணியின் போது மேற்கூரையிலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
எப்போதும் வென்றான் வடக்கு தெருவைச் சேர்ந்த நல்லகண்ணு மகன் காளியப்பன் (50). கட்டடத் தொழிலாளியான இவர், கடந்த 2 நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி நேதாஜி நகரில் மேற்கூரை கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.