கட்டுமானப் பணியின் போது தவறி விழுந்து தொழிலாளி பலி

தூத்துக்குடியில் கட்டுமானப் பணியின் போது மேற்கூரையிலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் கட்டுமானப் பணியின் போது மேற்கூரையிலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
எப்போதும் வென்றான் வடக்கு தெருவைச் சேர்ந்த நல்லகண்ணு மகன் காளியப்பன் (50). கட்டடத் தொழிலாளியான இவர், கடந்த 2 நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி நேதாஜி நகரில் மேற்கூரை கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com