ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. இன்றுமுதல் நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம்

ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சண்முகையா ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் 9) முதல் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.


ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சண்முகையா ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் 9) முதல் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சண்முகையா எம்.எல்.ஏ., ஞாயிற்றுக்கிழமை முதல் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி காலை 6 மணிக்கு புதியம்புத்தூர் ஊராட்சி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி,  ஜம்புலிங்கபுரம் ஊராட்சி பகுதியிலும், மாலையில் 4 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி, கவர்னகிரி, அகிலாண்டபுரம், குறுக்குச்சாலை ஆகிய பகுதிகளிலும் நன்றி தெரிவிக்கிறார்.தொடர்ந்து அவர் ஜூன் 16ஆம் தேதி வரையிலும் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com