"ஸ்ரீவைகுண்டத்தில் 19இல் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்'

ஸ்ரீவைகுண்டத்தில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் ஜூன் 19இல் நடைபெறுகிறது.

ஸ்ரீவைகுண்டத்தில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் ஜூன் 19இல் நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்க பொதுச் செயலர் ராஜ் செல்வின் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொழில் மற்றும் வணிகத் துறையின் மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் சங்கத்துடன் (துடிசியா) இணைந்து தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இம்மாதம் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடத்துகிறது. சுய தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டோர், பணியிலுள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழிற்பயிற்சி பெற்ற ஆண் - பெண் அனைவரும் இதில் பங்கேற்கலாம். மேலும், தூத்துக்குடி துடிசியா அலுவலகத்தில் நாள்தோறும் காலை 10 முதல் மாலை 6 மணி வரை புதிய தொழில், சேவை, வியாபாரம் தொடங்க விருப்பமுள்ளோருக்கு இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 0461-2347005 என்ற தொலைபேசி எண்ணிலும், 98401 58943, 77087 84867 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com