திருச்செந்தூரில் குறவன்மடம், அருள்மிகு இசக்கியம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடை விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு மாகாப்பு அலங்கார தீபாராதனையும், திங்கள்கிழமை இரவு லேபன அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 11 மணிக்கு படைப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.