மேலாத்தூர் அருள்மிகு முத்தாரம்மன் மற்றும் அருள்மிகு கபால ஈஸ்வரி அம்மன் திருக்கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு முத்தாரம்மன், கபால ஈஸ்வரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
விழாவில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.