தூத்துக்குடி ரங்கநாதபுரம் சி.எம்.மேனிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை அமைப்பு சார்பில், உலக சுற்றுச்சூழல் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
விழாவின்போது, விழிப்புணர்வுப் பேரணியை பள்ளியின் உதவி தலைமையாசிரியை சங்கரேஸ்வரி கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து, கிருஷ்ணவேணி ராமநாதன், பொறுப்பாசிரியை பா. வசந்தராணி ஆகியோர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பேசினர். மேலும், காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.