ஆத்தூர் புன்னைக்காயலில் நடைபெற்ற மாவட்ட கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழகம் சார்பில் 46 ஆவது ஆண்டு மனுவேல் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான மாவட்ட கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் தூத்துக்குடி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணி, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணிகள் மோதின.
இதில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சுழற்கோப்பையை கைப்பற்றியது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட கால்பந்து கழகச் செயலர் ஜே.ஆல்ட்ரின் மிராண்டா தலைமை வகித்தார். பொருளாளர் எஸ்.பிரின்ஸ்டன் பர்னாந்து முன்னிலை வகித்தார். பங்குத்தந்தை கிஷோக் அடிகளார்,
துணை பங்குத்தந்தை பனிமயம் அடிகளார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.ஆத்தூர் காவல்ஆய்வாளர் கே.கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வெற்றி பெற்ற ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார்.
புனித வளன் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எஸ்.சகாயராஜ் நன்றி கூறினார்.