ஜூலை 3 இல் கோவில்பட்டி அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு,  ஜூலை 3ஆம் தேதி நடைபெறுகிறது. 

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு,  ஜூலை 3ஆம் தேதி நடைபெறுகிறது. 
இதுகுறித்து கல்லூரி முதல்வர் தீபா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை ஜூலை 3ஆம் தேதி நடைபெறுகிறது.  முதுகலை பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர், மாணவிகள் சேர்ந்து பயிலுவதற்கான விண்ணப்பங்கள் கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் ஜூலை 1ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com