சாத்தான்குளம் அருகே தீ விபத்தில் காயமடைந்த பெண், மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
சாத்தான்குளம் அருகே வாலத்தூரைச் சேர்ந்த பிரேம்குமார் மனைவி பிரிடா ஜேனட் (23). இவர்களுக்கு திருமணமாகி 4ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 15ஆம்தேதி பிரிடா ஜேனட் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் செவ்வாய்க்கிழமை இறந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.