பி.எஸ்.என்.எல். நிறுவனம் தூத்துக்குடி மாவட்ட வாடிக்கையாளர்களுக்காக "அபிநந்தன்- 151' என்ற பிரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் ஆர்.சஜிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பி.எஸ்.என்.எல். தனது பிரீபெய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான 'அபிநந்தன்- 151' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் 90 நாள்களுக்கு மட்டும் சிறப்பு சலுகையாக அளிக்கப்படுகிறது. ரூ. 151-க்கு அளவற்ற வாய்ஸ் அழைப்புகள் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் (மும்பை,தில்லி உள்பட) ரோமிங்கில் கிடைக்கும்.
மேலும், இலவசமாக இந்தத் திட்டத்தில் தினமும் 1 ஜி.பி. டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ். அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் கிடைக்கும். இவையனைத்தும் முதல் 24 நாள்களுக்கு கிடைக்கும். இந்தத் திட்டத்தை தூத்துக்குடி மாவட்ட வாடிக்கையாளர்கள் பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.