ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் சந்திப்பு நிகழ்ச்சி

இந்திய ராணுவத்தில், சென்னை பொறியியல் 13ஆவது பிரிவின் 53ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு

இந்திய ராணுவத்தில், சென்னை பொறியியல் 13ஆவது பிரிவின் 53ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பொறியியல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினரின் சந்திப்பு நிகழ்ச்சி  கோவில்பட்டியில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு,  கர்னல் யாசின் தலைமை வகித்தார்.  கர்னல் ராமசுப்பு முன்னிலை வகித்தார்.  கேப்டன் சக்கரவர்த்தி, சொக்கலிங்கம்,  என்.வி.கிருஷ்ணன்,  ரசீது,  பாலசுந்தரம், சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு, தங்கள் பணி காலத்தில் பொறியியல் பிரிவில் நடந்த நிகழ்வுகளை எடுத்துக் கூறினர்.  தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற தென் தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பிரிவு முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு, தங்கள் பணிக்காலத்தில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் ராணுவ நலச் சங்கத் தலைவர் ஓய்வு பெற்ற சுபேதார் கேசவராஜன் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com