திருச்செந்தூரில் பா.ஜ.க. கொடியேற்று விழா நடைபெற்றது.
திருச்செந்தூர் சன்னதித்தெரு முகப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலர் இரா.சிவமுருகன் ஆதித்தன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டி.செந்தில்வேல், ஒன்றியத் தலைவர் ஸ்ரீகிருஷ்ணகுமார், நகரத்தலைவர் சரவணன், மாவட்ட தமிழ் வளர்ச்சிப்பிரிவுத் தலைவர் இரா.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிரணி பொதுச் செயலர் கு.நெல்லையம்மாள் வரவேற்றார். மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கட்சிக் கொடியேற்றினார். இதில், இளைஞரணிச் செயலர் முத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், இந்து முன்னணி நெல்லை கோட்ட பொறுப்பாளர் பெ.சக்திவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.