மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கை எய்த வேண்டும் என வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு மனிதச்சங்கலி கருங்கடல் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஆணையர் தங்கவேல் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பாலஹரிகர மோகன் முன்னிலை வகித்தார்.
இதில் வாக்களிப்பது நமது கடமை; ஜனநாயக முறைப்படி நேர்மையுடன் 100 சதவீத வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தொடர்ந்து, கருங்கடல் ஊராட்சி அலுவலகம் முன் மனிதச் சங்கலி நடைபெற்றது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் சோமசுந்தரம், சிவகலா, ஜெயக்குமார், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முருகேசன் செய்திருந்தார்.