கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக அமல்படுத்துவது குறித்து, வருவாய்த்துறை சார்பில் தனியார் திருமண மண்டபம், அச்சகம், விடுதி உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியர் அமுதா தலைமை வகித்து, தேர்தல் நடத்தை விதிகளை எடுத்துக்கூறினார். மேலும், அவற்றை அனைவரும் கடைப்பிடித்து தேர்தல் சுமுகமாக நடைபெற்ற ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அறிவுறுத்தினார்.