திருச்செந்தூர் கோட்டம், உடன்குடி மற்றும் ஆறுமுகனேரி துணை மின் நிலையங்களின் மேம்பாட்டு பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (மார்ச் 16) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சீர்காட்சி, நாலுமூலைக்கிணறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், ஆறுமுகனேரி, காயல்பட்டணம், வீரபாண்டியன்பட்டிணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, ஆலந்தலை, கல்லாமொழி, காயாமொழி, கரம்பவிளை, அமலிநகர், தோப்பூர், குமாரபுரம், ராணி மகாராஜபுரம், பள்ளத்தூர், சண்முகபுரம், கோயில்விளை, கிருஷ்ணாநகர், புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், ஆத்தூர் நிரேற்று நிலையம், மேலஆத்தூர், தெற்குஆத்தூர் தென்பகுதி, சுகந்தலை, சொக்கப்பழக்கரை ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.