நாசரேத் அருகே உள்ள நாலுமாவடியில், இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் வியாபாரம் மற்றும் தொழில் செய்கிறவர்களுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபம் நடைபெற்றது.
அப்பாதுரை சிறப்பு செய்தி அளித்தார். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் பிரசங்கம் செய்தார். நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து திரளானோர் கலந்துகொண்டனர். இதையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.