உடன்குடி மளிகைக்கடையில் மின்கசிவால் ஏற்பட்ட திடீர் அங்கிருந்த பொருள்கள் எரிந்து சேதமாகின.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி மகன் பிரகாஷ்(25). இவர் உடன்குடி சத்தியமூர்த்தி பஜாரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் சனிக்கிழமை பிற்பகலில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின. அருகில் உள்ளவர்கள் உடனடியாக தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.