கொட்டங்காடு கோயிலில் ஊஞ்சல் சேவை

உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை  ஊஞ்சல்

உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை  ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை  இரவு 7 மணிக்கு பவளமுத்து விநாயகர் மற்றும் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள், 8 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை,  9  மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, அம்மன் உள்பிரகார சப்பர பவனி , ஊஞ்சல் சேவை , பிரசாதம் வழங்கல்,   அன்னதானம் ஆகியன  நடைபெற்றன. 
ஏற்பாடுகளை கோயில்  பரம்பரை தர்மகர்த்தா பெ.சுந்தரஈசன் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com