உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு பவளமுத்து விநாயகர் மற்றும் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள், 8 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, அம்மன் உள்பிரகார சப்பர பவனி , ஊஞ்சல் சேவை , பிரசாதம் வழங்கல், அன்னதானம் ஆகியன நடைபெற்றன.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா பெ.சுந்தரஈசன் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.