கோவில்பட்டியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி கிழக்கு காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடலையூர் சாலையில் திருமண மண்டபம் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனையிட்ட போது, அவர்கள் பையில் மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், வள்ளுவர் நகரைச் சேர்ந்த காளியப்பன் மகன் வெள்ளத்துரை(40) மற்றும் பாரதி நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த அரசப்பன் மகன் முருகன்(50) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த 80 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.150-யை பறிமுதல் செய்தனர்.