ஆறுமுகனேரி சிவன் கோயிலில் வள்ளி திருக்கல்யாணம்

ஆறுமுகனேரியில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு சோமசுந்தரி அம்மன் 

ஆறுமுகனேரியில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத  சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு  வள்ளித் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்த வைபவத்துக்காக, சுவாமி மற்றும் அம்பாள்  திருக்கோவிலின் கீழ்புறம் அமைந்துள்ள கொடிமரத்து மண்டபத்துக்கு மாலையில் எழுந்தருளினர். அங்கு பக்தர்கள் முன்னிலையில்  சுவாமி மற்றும் அம்பாளுக்கு பல்வே சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் பல்வேறு சிறப்பு  அலங்காரங்களுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. சிறப்புப் பூஜைகளை சு.அய்யப்ப பட்டர் நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் கோயில் பன்னிரு திருமுறை மகளிர் குழுவினருடன் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி - அம்பாளை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com