நேர்மையான அரசியலை முன்னெடுக்க விரும்புகிறேன்: தமிழிசை 

நேர்மையான அரசியலை முன்னெடுக்க  விரும்புகிறேன் என்றார் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக

நேர்மையான அரசியலை முன்னெடுக்க  விரும்புகிறேன் என்றார் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான தமிழிசை செளந்தரராஜன்.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக செயல்படுகிறது. தமிழகத்தில் எங்கள் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான சில திட்டங்களை வைத்துள்ளோம். இதுதொடர்பாக யாரும் சிந்திக்காத திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணப் படத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மார்ச் 26ஆம் தேதி வெளியிடுகிறார். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி குற்றம்சாட்டுகிறார். ஆனால், பத்திரிகையில் விளம்பரம் கொடுத்ததற்காக மறைந்த சாதிக்பாட்சாவின் மனைவி திமுகவினரால் மிரட்டப்படுகிறார். நேர்மையான கருத்துகளை முன்வைத்து தேர்தலில் பிரசாரம் செய்வேன். அத்துடன் நேர்மையான அரசியலை முன்னெடுக்க விரும்புகிறேன். தூத்துக்குடியில் மார்ச் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தபின் எனது பிரசாரம் தொடங்கும். தூத்துக்குடி மக்கள் வாய்ப்பளித்தால் எளிதில் அணுகக் கூடியவராக, பிரதிநிதியாக இருந்து  மக்களுக்கு சேவையாற்றுவேன் என்றார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com