மே தினத்தையொட்டி, சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்கத்தினர் சார்பில் கழுகுமலையில் கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது.
கயத்தாறு வட்ட சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகி மாரியப்பன் தலைமை வகித்து, தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கயத்தாறு ஒன்றியச் செயலர் சாலமன்ராஜ் மே தினத்தை வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில், சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்கத் தலைவர் துரைச்சாமி, செயலர் கருணாநிதி, பொருளாளர் ஜெயக்கொடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.