தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாசரேத் பள்ளிக்கு 5 கணினிகள் அளிப்பு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் நாசரேத் சாலமோன் மெட்ரிக்   மேல்நிலைப் பள்ளிக்கு 5 கணினிகள்  இலவசமாக வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் நாசரேத் சாலமோன் மெட்ரிக்   மேல்நிலைப் பள்ளிக்கு 5 கணினிகள்  இலவசமாக வழங்கப்பட்டன.
இப்பள்ளியில் நிகழாண்டு 11ஆம் வகுப்பு  தொடங்கப்படுவதையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார். ஆசிரியை எலிசபெத் ஜெபம் செய்தார். தொழிலதிபர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
நாசரேத் பிரகாசபுரம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை மேலாளர் பொன்சேகர்,  பள்ளி முதல்வர் அனிஜெரால்டுவிடம் 5 கணினிகளை வழங்கினார்.
இதில், வங்கி ஊழியர் ரிச்சர்சன், பள்ளித் தலைவர் சத்தியவதி மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உதவி முதல்வர் மகிலா சரவணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com