ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம்: அடையாளம் தெரிந்தது

கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம், பள்ளி மாணவர் என வெள்ளிக்கிழமை அடையாளம் தெரிந்தது.

கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம், பள்ளி மாணவர் என வெள்ளிக்கிழமை அடையாளம் தெரிந்தது.
கோவில்பட்டி - குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையேயுள்ள பெத்தேல் ஹோம் பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ரயிலில் அடிபட்ட நிலையில் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸார் சடலத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர். 
இந்நிலையில், இறந்தவர் கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி, புதுக்காலனியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் விக்னேஷ் (15) என்பது தெரிய வந்தது. 
விக்னேஷ் கோவில்பட்டியிலுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com