பைக்குகள் மோதல்: இளைஞர் பலி
By DIN | Published On : 05th May 2019 01:15 AM | Last Updated : 05th May 2019 01:15 AM | அ+அ அ- |

நாசரேத் அருகே வெள்ளிக்கிழமை பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே உள்ள பரப்பாடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் மகன் அலெக்சாண்டர் (28). மருந்து விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். வெள்ளிக்கிழமை இது தொடர்பாக பைக்கில் நாசரேத் நோக்கிச் சென்றார். தைலாபுரம் விலக்கில் வரும் போது இவரது பைக்கும், எதிரே நாசரேத் பிரகாசபுரத்தில் இருந்து வந்த ஜெயராஜ் மகள் ஜேக்கப் (24) வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் காயமடைந்தனர். பலத்த காயமுற்ற அலெக்சாண்டர், மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஜேக்கப் , சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து மெஞ்ஞானபுரம் போலீஸார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...