முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
வேன் மோதி பக்தர் பலி
By DIN | Published On : 15th May 2019 06:48 AM | Last Updated : 15th May 2019 06:48 AM | அ+அ அ- |

எப்போதும் வென்றான் அருகே வேன் மோதிய விபத்தில் திருச்செந்தூருக்கு நடந்து சென்ற பக்தர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மேலூரைச் சேர்ந்த 20 பக்தர்கள் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்து கொண்டிருந்தனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 4 மணிக்கு அனைவரும் எப்போதும்வென்றான் பகுதியில் உள்ள பாலத்தில் நடந்து சென்ற போது, மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற வேன் பாதயாத்திரை பக்தரான சேது மகன் அரசு (55) மீது மோதியது.
இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.