மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி
By DIN | Published On : 15th May 2019 06:48 AM | Last Updated : 15th May 2019 06:48 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கோவில்பட்டி ராஜீவ் நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் கருப்பசாமி(21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துமாலையுடன் கொடுக்காம்பாறை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு மின் அமைக்கும் பணிக்காக சென்றிருந்தாராம். அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது கருப்பசாமி மீது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.