நீரில் மூழ்கி மாணவர் பலி

மணியாச்சி அருகே நண்பர்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர் புதன்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

மணியாச்சி அருகே நண்பர்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர் புதன்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார். 
   மணியாச்சியை அடுத்துள்ள ஐயப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் உடையார் கண்ணன் (14), கடம்பூர் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இந்நிலையில் நண்பர்களுடன் புதன்கிழமை அங்குள்ள குளத்திற்கு குளிக்கச் சென்ற போது  ஆழமான பகுதிக்கு சென்ற உடையார்  கண்ணன் சேற்றில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு தண்ணீருக்குள் மூழ்கினராம்.  இதையடுத்து அங்கிருந்தவர்கள் நீரில் மூழ்கிய  மாணவரை மீட்டு  திருநெல்வேலி  அரசு மருத்துவக் கல்லூரி மனைக்கு கொண்டுசென்றனர்.  ஆனால் செல்லும் வழியிலேயே  அவர் உயிரிழந்தார். இதுகுறித்து நாரைக்கிணறு காவல்துறையினர் வழக்குப் பதிந்து  விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com