முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கோவில்பட்டியில் விபத்து: மூதாட்டி பலி
By DIN | Published On : 18th May 2019 04:44 AM | Last Updated : 18th May 2019 04:44 AM | அ+அ அ- |

கோவில்பட்டி புறவழிச்சாலையில் அரசு விரைவுப் பேருந்து மோதியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
கோவில்பட்டியை அடுத்த மூப்பன்பட்டி காலனியைச் சேர்ந்த பால்பாண்டியன் மனைவி மாரியம்மாள்(70). இவர், காட்டு வேலைக்குச் சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை வீட்டுக்கு திரும்புகையில், கோவில்பட்டி புறவழிச்சாலையைக் கடக்க முயன்றாராம்.
அப்போது, மார்த்தாண்டத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து அவர் மீது எதிர்பாராமல் மோதியதாம். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இத்தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸார், மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், பேருந்து ஓட்டுநரான கன்னியாகுமரி மாவட்டம், விதைகோடைச் சேர்ந்த அ.ஜெய்சிங் (44) மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.