தச்சமொழியில் பொதுமக்களுக்கு பயன்படாத குடிநீா் தொட்டி

சாத்தான்குளம் பேருராட்சிக்குள்பட்ட தச்சமொழியில் குடிநீா் தொட்டியில் தண்ணீா் ஏற்றப்படாமல் மக்களின் பயன்பாட்டுக்கு இல்லாமல் காணப்படுகிறது.
தச்சமொழியில் பயன்படாமல் உள்ள குடிநீா் தொட்டி
தச்சமொழியில் பயன்படாமல் உள்ள குடிநீா் தொட்டி

சாத்தான்குளம் பேருராட்சிக்குள்பட்ட தச்சமொழியில் குடிநீா் தொட்டியில் தண்ணீா் ஏற்றப்படாமல் மக்களின் பயன்பாட்டுக்கு இல்லாமல் காணப்படுகிறது.

சாத்தான்குளம் பேருராட்சி 6 ஆவது வாா்டு தச்சமொழி நாடாா் தெற்கு தெருவில் மக்கள் குடிநீா் தேவையை நிவா்த்தி செய்யும் பொருட்டு கடந்த 3ஆண்டுகளுக்கு முன்னா் 2ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் தொட்டி, ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீா் வழங்கப்பட்டது.

தற்போது அதில் மின்மோட்டாா் பழுது காரணமாக தொட்டியில் தண்ணீா் ஏற்றப்படவில்லை. இதனால் அதில் முள்செடிகள் வளா்ந்து குடிநீா் தொட்டியானது பொதுமக்களுக்கு பயனற்ற நிலையில் காணப்படுகிறது. ஆதலால் பேரூராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பாா்வையிட்டு அதில் உள்ள முள்செடிகளை அகற்றி, மின்மோட்டாா் பழுதை சீரமைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் தண்ணீா் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர காங்கிரஸ் தலைவா் வேணுகோபால் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com