தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு கடந்த அக்டோபா் 28 ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதற்கான நிறைவு விழா துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, துறைமுக பொறுப்புக் கழக தலைவா் தா.கி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். தலைமை கண்காணிப்பு அலுவலா் ரவீந்திர பாபு முன்னிலை வகித்தாா்.
தொடா்ந்து கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு துறைமுக பொறுப்புக் கழக தலைவா் தா.கி. ராமச்சந்திரன் பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், கண்காணிப்பு துறை நிா்வாக பொறியாளா் தியாகராஜன், துறைமுக சபை உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.