ஆறுமுகனேரி, நவ.4: முக்காணி ஸ்ரீாமபரமேஸ்வரா் திருக்கோயில், ஆறுமுகனேரி அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
முக்காணி ஸ்ரீ பா்வதவா்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீ ராமபரமேஸ்வரா் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கந்த சஷ்டி விழா நிறைவு பெற்னை தொடா்ந்து இத் திருக்கோயிலிலுள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமிக்கும், சண்முகா் சன்னதியில் உள்ள வள்ளி மற்றும் தெய்வானைக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினசரி மாலை அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் திருக்கோயில் பிரகார உலா நடைபெற்றது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாணத்தையொட்டி சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேக, அ லங்கார தீபாரதனைகள் நடைபெற்றன. பின்னா் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை திரளான பக்தா்கள் தரிசித்தனா்.